லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் அவரது இரு மகள்களுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர் ஹீனா. இவருக்கு ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள் இருந்தனர்.
தனது கணவரின் பெற்றோருடன் வசிக்க ஹீனாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், அவர் தனது இரு மகளுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.
இத்துயர சம்பவம் குறித்து தெரிவித்த ஹீனாவின் கணவர் கல்பேஷ், ‘நானும் ஹீனாவும் எங்கள் மகள்களோடு நிம்மதியாக வாழ்ந்தோம். அவள் இறப்பதற்கு முன்பு வரை அவள் மகிழ்ச்சியாக இருந்ததாகவே நான் எண்ணினேன்.
நாங்கள் என் பெற்றோருடன் வசித்துவந்தது ஹீனாவிற்கு பிடிக்காது என எனக்கு தெரியும். ஆனால், அவள் எப்போதும் தனது வாழ்வை முடித்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததில்லை. இச்சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கல்பேஷ் தெரிவித்தார்.
ஹீனாவின் தோழியான பிரனாலி சாம்பிரே கூறுகையில், தனது மாமனார் கடுமையாக நடந்துகொள்வதாக ஹீனா தன்னிடம் தெரிவித்தாக கூறியுள்ளார். ஒரு சந்தர்ப்பந்தத்தில் ஹீனா கதறி அழுததாகவும் கூறிய பிரனாலி, ஆனால் இப்படி தற்கொலை செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
இண்டலிஜன்ஸ் அதிகாரியை கொலை செய்த ஈரான் இளம்பெண்ணுக்கு தூக்கு தண்டனை
27-10-2014
ஈரான் நாட்டை சேர்ந்த இண்டலிஜென்ஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக அந்நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் தூக்கிலிடப்பட்டார். இதனால் ஈரானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரான் நாட்டை சேர்ந்த 26 வயது Reyhaneh Jabbari, என்ற பெண் அந்நாட்டு இண்டலிஜென்ஸ் அதிகாரி Morteza Abdolali Sarbandi என்ற நபரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குதண்டனை வழங்கியது. இந்த தண்டனை கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இண்டலிஜென்ஸ் அதிகாரி தன்னை கற்பழிக்க வந்ததாகவும், அதனால் தன்னை அவரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே தாக்கியதாகவும் Reyhaneh Jabbari, அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடியதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
Reyhaneh Jabbari, அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு அதிகாரியை கொலை செய்ய கத்தி வாங்கினார் என்பது ஆதாரத்துடன் நிரூபணம் ஆனதால், அவருக்கு தூக்கு தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.