பிரேசில் நாட்டில் மூன்று வயது குழந்தை ஒன்று ஐந்தாவது மாடியின் பால்கனியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த காட்சியை கண்டு அந்த வழியே சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். இந்த அதிர்ச்சி காட்சியை வீடியோ தற்போது உலகமெங்கும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
பிரேசில் நாட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஐந்தாவது மாடியின் பால்கனியில் இருந்த நாற்காலி ஒன்றின் மேல் ஏறிய 3 வயது சிறுமி திடீரென தடுமாறி பால்கனி கைப்பிடிச்சுவரின் மேல் விழுந்துவிட்டார். பின்னர் கைப்பிடி சுவரை தாண்டி கிழே தொங்கிக்கொண்டிருந்த அதிர்ச்சி காட்சியை கண்டு கீழே இருந்தவர்கள் பதட்டமடைந்தார்கள்.
எந்த நிமிடமும் குழந்தை கீழே விழுந்துவிடும் என்ற அச்சத்தில் இருந்தபோது குழந்தை கீழே விழுந்தால் அதை எப்படி காப்பாற்றுவது என்று அங்கிருந்தவர்கள் ஆலோசனை செய்தனர்.
இந்நிலையில் ஐந்தாவது மாடியில் அருகில் உள்ள வீட்டில் உள்ள ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனடியாக வந்து குழந்தையை தூக்கி காப்பாற்றினார். இந்த பரபரப்பு எதுவுமே அறியாமல் குழந்தையின் தாய் வீட்டி ன் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார் என்பதுதான் ஆச்சரியமான தகவல். நமது தேடிப்பார் வாசகர்களுக்காக இந்த அதிர்ச்சி வீடியோ இதோ…