பாரிஸ் நகர காவல்துறையினரின் தனிப்பட்ட விநோத உடை விருந்து நிகழ்வில் கறுப்பின மக்களை கேலி செய்யும் வகையில், உடலில் கறுப்பு மை பூசி வாழைப்பழம் உண்டு கொண்டிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இது இவர்களின் தனிப்பட்ட விருந்து நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆயினும்…இவர்கள் கறுப்பின மக்களின் சிகையலங்காரத்தை ஒத்த செயற்கை முடிகள் அணிந்து முகங்களில் கறுப்பு வர்ணம் பூசியபடி சிரித்தவாறு உள்ள படங்களே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பிறிதொரு படத்தில் இன்னொரு காவல்துறை அதிகாரி வாழைப்பழங்கள் நிரப்பிய கூடையொன்றிற்கு அருகில் இருப்பதும் அவர் முன்னால் தானியங்கள் அடங்கிய கூடை ஒன்று இருப்பதுமாக இவர் குரங்காக தன்னை வர்ணித்து தன்னைத்தானே சொறிந்து கொள்வது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.
தற்போது இந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிறிதொரு சமூகத்தை பழிப்பதுபோன்று இருக்கும் நடத்தையை செய்துள்ள இவர்கள் சமூகத்தின் மீது ஒரே மாதிரியான கண்னோட்டத்தை கொண்டிருக்கமாட்டார்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.