யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் வழிபாட்டு அறையின் மீதும் இனந்தெரியர்தவர்கள் கழிவு எண்ணெய் ஊற்றிய சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த முஸ்லிம் மாணவர்கள் இன்று காலையில் தொழுகைக்கு சென்ற வேளையில் இத்தகைய விசமத்தனமான வெறுக்கத்தக்க செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம் மாணவர்களின் வழி பாட்டுத்தலத்தின் மீது இத்தகைய வன்முறைச் சம்பவம் மூன்றாவது தடவையாக மேற் கொள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற இத்தகைய சம்பவங்களுக்கு பல்கலைக் கழகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லையெனக் கூறி பொறுப்பை தட்டிக் கழித்தாகவும் தற்போது பாதுகாப்பு ஊழியர்கள் கடமை அதிகரிக்கப்பட்ட நிலையிலும் இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ள போதிலும் பல் கலைக்கழக நிர்வாகம் இது வரையில் ஆக்க பூர்வமான பதில் எதனையும் தரவில்லையெனவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் ஒரு குழப்பான நிலமையை உருவாக்கும் நோக்கில் அரசியல் பின்னனியை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய சம்பவம் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் பல் கலைக்கழக சமூகம் தொவித்துள்ளது.