தற்போது இணையத்தளங்கில் பெண் ஒருவரின் முகத்தை கொண்ட நெகட்டிவ் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பெண்ணின் மூக்கு பகுதியில் உள்ள வெள்ளை நிற புள்ளியை சுமார் 15 செக்கன்கள் உற்று நோக்கிய பின்னர் அருகில் இருக்கும் வெண்மை நிறப் பகுதிக்யை நோக்கி முகத்தை திருப்பும் போது அங்கு அழகிய பெண் ஒருவரின் முகம் தென்படுகின்றது. குறித்தப் படமானது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வினோத ஒளியியல் மாயை சோதனையை செய்வதற்காக குறித்த நெகட்டிவ் படம் உருவாக்கப்பட்டுள்ளதோடு இச் சோதனை வெற்றியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கீழே உள்ள இந்த நெகட்டிவ் படத்தில் உள்ள வெள்ளை புள்ளியை சிறிது நேரம் உற்று நோக்கி விட்டு பார்வையை அருகில் இருக்கும் பகுதிக்கு திரும்பும் போது அழகிய பெண்ணின் உருவம் ஒன்று தெரிகின்றது.
இந்த நெகட்டிவ் படத்தை உற்று நோக்கிவிட்டு திரும்ப்பும் போது முழு வண்ணமயமான பெண்ணின் உருவம் மாயதோற்றமாக தெரிகின்றது.
இதனை (optical illusion ) காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை என அழைக்கடுகிறது.
அதாவது ஒரு படத்தை உற்று பார்ப்பது ஒப்டிக்கல் எனவும் இதன் பின்னர் முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும், கூர்ந்து நோக்கும் போது வேறு தோற்றமும் புலப்படுவது நிலைதான் இல்யூஷன் எனவும் அழைக்கப்படுகின்றது.
மூளையும் கண்களும் சேர்ந்து ஏமாற்றமான செயலை செய்வதே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து மாயை தோற்றத்தை புலப்படச் செய்கின்றன.
இதுபோன்று தான் இல்லாததை ‘இருப்பதாக கற்பனை ‘செய்வதில் மூளைக்கு பெரும்பங்கு இருக்கின்றது. இவ்வாறு ஏற்படும் மாயை காட்சி தெரிவது போன்று கண்களுக்கும் தோற்றுவிக்கின்றது.
குறிப்பாக இரவு நேரத்திலும் இருட்டான வேளைகளிலும் ஆவிகளின் உருவம் இருப்பதாக கற்பனையான எதிர்பார்ப்புடன் பார்க்கும் போது சில நேரங்கில் ஏதேனும் நிழல் தெரிந்தால் கூட கண்கள் அதை பேய்போல சந்தேகத்துடன் பார்க்க செய்கின்றது. இதனை தெளிவுப்படுத்தவே மேற்படி நெகட்டிவ் படம் உருவாக்கப்பட்டுள்ளது.