ராவ்’ என்ற மராத்திய நாவலை மையமாக வைத்து, 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மராத்திய பேஷ்வாவாக இருந்த பாஜிராவ் மற்றும் மஸ்தானி ஆகிய இருவருக்குமான காதலை மையமாக வைத்து ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தை இயக்கியிருந்தார், சஞ்சய் லீலா பன்சாலி.
இப்படத்திற்குப் பிறகு மீண்டும் ‘பத்மாவதி’ என்ற வரலாற்றுக் கதையைக் கையில் எடுத்த சஞ்சய் லீலா பன்சாலி, இந்தமுறை ‘பாஜிராவ் மஸ்தானி’யைவிட பிரம்மாண்டமான முறையில் ‘பத்மாவதி’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘பத்மாவதி’ திரைப்படம்.
தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் ராணி பத்மினியாக, தீபிகா படுகோனேவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்திருக்கிறார்கள்.
‘பாகுபலி’ போல பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘பத்மாவதி’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. டிசம்பர் 1-ல் இந்தப் படம் திரைக்கு வருகிறது.