உக்ரையின் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மாற்றுத் திறனாளியான 81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரையின் நாட்டு பிரஜைகள் இராணுவத்தில் சேரவேண்டியது கட்டாயமாகும். ஆனால் சில விதி விலக்குகள் உள்ளன. தமது மனைவி மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டும், அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் கணவருக்கு இராணுவத்தில் சேர்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ் விதிவிலக்கை சாதகமாக்கிகொண்ட உக்ரையின் நாட்டு 24 வயதான அலெக்ஸாண்டர் கொன்ட்ராட்யுக் என்ற இளைஞர், தனது திருமண உறவு முறையை கொண்ட 81 வயதான ஸினைடா இல்லாரியோனோவ்னா எனும் பாட்டியை .திருமணம் செய்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் இராணுவத்திலிருந்து ஆள்சேர்ப்புக்கு வரும் போதும் தனக்கு திருமணமான சான்றையும், தன் மனைவியின் மாற்றுத் திறனாளி சான்றையும் காண்பித்து இராணுவத்தில் சேர்வதில் இருந்து தப்பியுள்ளார் இந்த இளைஞர்.
இருப்பினும் இருவரும் போலியான திருமண வாழ்க்கை வாழ்வதாகவோ அல்லது இருவருக்கும் பொதுவான பொருட்கள் வீட்டில் இல்லை என கருதப்பட்டாலோ திருமணத்தை இரத்து செய்து இராணுவத்தில் சேர்க்கலாம் என அந்நாட்டு சட்டம் கூறுகின்றது.
ஆனால், அவர் சட்டத்திற்கு அமைவாக திருமணம் செய்த சான்று மற்றும் மாற்றுத் திறனாளியான மனைவியின் பாதுகாவலராக பதிவுசெய்யப்பட்டுள்ளதாலும் இராணுவத்தில் சேர வேண்டிய அவசியமில்லை என ஆணையாளர் தெரிவித்துள்ளனர்.