மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனையில் கடலில் மிதந்துவந்த சடலம் நேற்று பகல் மீட்கப்படுள்ளது.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வெளிநாட்டவருடையதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சடலம் மேலதிக விசாரணைகளுக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகா.கி கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.