ஜனவரி 1 முதல் தனியார் பஸ்களில் பயணிகளின் காதை பிளக்கும் சப்தத்தில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒலி, ஓளிபரப்பு செய்ய தடை விதிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காதுகளை பிளக்கும் வகையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒலி, ஓளிபரப்பு செய்யும் தனியார் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும்.
முறைப்பாடு மேற்கொள்ளப்படும் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.