எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்று பரவும் வைரஸ்களை ஒழிக்க வன விலங்குகளை இறைச்சியாக விற்கும் சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஐ.நா வின் பல்லுயிர் துறை தலைமை அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் வூஹானில் வனவிலங்கு இறைச்சி சந்தையில் இருந்து தான் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது என்று கருதப்படுவதால் அந்நாட்டில் வனவிலங்கு இறைச்சி சந்தைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வூஹானின் வனவிலங்கு இறைச்சி சந்தை தான் கொரோனா தொற்றுக்கு காரணம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் உலகம் முழுவதும் வனவிலங்கு இறைச்சி வியாபாரத்தை நம்பியே பல கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.