தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் திகதி முதல் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பவேண்டும் என்பதற்காக அதிமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலரும் அவருக்காக கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன் பயனாக முதல்வரும் தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் காசியிலிருந்து பூசாரி ஒருவர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்டு மருத்துவமனை வந்துள்ளார். ஆனால் அவரை உள்ளே விட பாதுகாப்பு பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அவரோ முதல்வரை பார்க்காமல் போகமாட்டேன் எனக்கூறிய தன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் சொல்லி அனுப்பியுள்ளார். தான் காசி விஸ்வநாதர் கோவில் பிரதான பூசாரி என்றும் தனது பெயர் ஓமாச்சாரி என்று கூறி பிரசாதத்துடன் வந்திருப்பதாக கூறி தகவல் சொல்லி அனுப்பினார்.
சற்று நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி கருப்புச்சாமி நேரில் வந்து யாருக்கும் கிடைக்காத மாரியாதை போல் பூசாரியை பவ்யமாய் அழைத்து சென்றார்.
அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் பலர் நீண்ட நாட்களாக தாம் இங்கு இருந்த பிறகே முதல்வரின் உடல் நிலை குறித்து நமக்கு சரிவர தெரிந்தது. ஆனால் இந்த காசி பூசாரிக்கு வந்தவுடன் அனுமதி கிடைத்துள்ளது அவருக்கு கிடைத்த பாக்கியம் தான் என மருத்துவமனையில் இருந்த கட்சி நிர்வாகிகள் கிசுகிசுத்தாக கூறப்படுகிறது.