மும்பை: ரித்திகா சிங்கின் தாயை பார்த்தவர்களுக்கு சந்தூர் சோப்பு விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது. இறுதிச் சுற்று படம் மூலம் நடிகையானவர் ரித்திகா சிங். முதல் படத்திலேயே நடிப்பில் அசத்திவிட்டார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் தனது அம்மாவின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அந்த புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். காரணம் ரித்திகாவின் அம்மா அவருக்கு அக்கா போன்று இளமையாக இருக்கிறார்.
புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ, சந்தூர் சோப்பு விளம்பரம் நினைவுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.
உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் தாய், மகள் போன்று இல்லை அக்கா, தங்கை போன்று இருக்கிறீர்கள் என்று நெட்டிசன்ஸ் கமெண்ட் போட்டுள்ளனர்.
சில குசும்புக்காரர்கள் இந்த புகைப்படத்தில் யார் மம்மி என்று ரித்திகாவிடம் கேட்டுள்ளனர்.