அமெரிக்காவில் நினைவு நாளை முன்னிட்டு மக்கள் கடற்கரைகளிலும், ஏரிகளிலும் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர்.
கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள கட்டுப்பாடுகளை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளது அதிகாரிகளை அச்சமடைய வைத்துள்ளது.
மே மாதத்தில் வரும் வருடாந்திர விடுமுறை நாளான நினைவு நாள், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது.
கோடைக் காலத்தின் தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. கலிஃபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பொது இடங்களில் கூடிய மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வழக்கமான நாட்களைப் போல இருந்தனர்.
அமெரிக்க கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுத் தலைவர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ், மக்கள் கூடிய காட்சிகளைப் பார்த்தபின் தான் மிகவும் கவலைப்படுவதாகக் கூறியுள்ளார்.
உலகிலே அதிகளவிலான கொரோன தொற்று அமெரிக்காவில் உள்ளது. இங்கு இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.
இரண்டு மாத பொது முடக்கத்திற்குப் பிறகு அமெரிக்காவின் 50 மாகாணங்களும் முடக்கத்தைச் சற்று தளர்த்தியுள்ளன. ஆனால், கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கின்றது.