கிழக்கு பிரான்ஸிலுள்ள வீட்டு தோட்டத்தில் உலங்கு வானூர்தியொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 சுவிஸ் பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
அயல் நாடான சுவிட்ஸர்லாந்திலிருந்து 7 சுவிஸ் பிரஜைகளுடன் பயணத்தை மேற்கொண்ட இந்த உலங்கு வானூர்தி பார்ட் நகரில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்து படுகாயமடைந்த நிலையில் உயிர்தப்பிய இருவரினதும் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் தரையிலிருந்த எவரும் காயமடையவில்லை.
மேற்படி விமானத்தில் நிர்மாணம் மற்றும் பொதுபணி தொடர்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொள்ளச் சென்ற 6 தொழில் முயற்சியாளர்களும் விமானியும் பயணித்ததாக கூறப்படுகிறது.