பொல்லால் தாக்கி கணவனை கொலை செய்த மனைவியை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரியபொல – மினுவாங்கெட்டே பகுதியில் கடந்த 7ம் திகதி இரவு இக்கொலை இடம்பெற்றுள்ள நிலையில் சடலம் அன்றே குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை மூலம் தகவல் அறிந்து கொண்ட வாரியபொல பொலிஸார் இன்று (16) குறித்த சடலத்தை தோண்டியெடுத்துள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி, கணவரை கொலை செய்து புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 45 வயதுடைய பெண் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
பஸ் நிலையத்தில் சிசுவை அநாதையாக்கிச் சென்ற கல்நெஞ்ச பெற்றோர் யாரோ!
16-10-2014
மதவாச்சி – கெதேவ – கோனகும்புக்வெவ பிரதேச பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாகக் கிடந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று (16) அதிகாலை குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.
6 மாதங்கள் வயது நிறைந்த குழந்தை மதவாச்சி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் களவாக நுழைய முயற்சித்தவர் கிணற்றில் விழுந்து பலி
16-10-2014
கலேவெல – இப்பன்கடுவ பிரதேச வீடொன்றில் களவாய நுழைய முயற்சித்த நபர் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டுக்குள் நுழைய முயற்சித்ததை வீட்டு உரிமையாளர் கண்டுள்ளார்.
இதனையடுத்து தப்பிச் சென்ற நபர் வீட்டுக்குள் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
மாத்தளை – வாலேவெல பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.