யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியிலுள்ள வீடொன்றின் அடுப்புக்குள் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையொன்று, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த ஜீவாகரன் மேகித்தியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உருத்திரபுரத்திலிருந்து காங்கேசன்துறை வீதியிலுள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் சென்றிருந்த அக்குழந்தை, கடந்த 13ஆம் திகதி அவ்வீட்டிலுள்ள அடுப்புக்குள் தவறி வீழ்ந்துள்ளது.
நீண்ட நேரமாக அடுப்புக்குள் குழந்தை இருந்தமையால் குழந்தையின் பின்பகுதி கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது.
இதனையடுத்து, குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தும், குழந்தை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (21) உயிரிழந்துள்ளது.
(பருத்தித்துறையில் வாகன விபத்தில் ஒருவா் பலி – அதிர்ச்சி படங்கள்)
22-10-2013
யாழ்.பருத்தித்துறை மருதடி முருகன் கோயிலுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (21) இரவு 9.00 மணியளவில் நின்றுகொண்டிருந்த கென்டா் வாகனத்துடன் பருத்தித்துறையிலிருந்து மந்திகைநேக்கி பயனித்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் பயணித்தவர் தளத்திலே இறந்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனா்.
புட்டலை பருத்தித்துறையை சோ்ந்த தவராசா கண்ணதாஸ் (21) என்பவரே உயிாிழந்துள்ளார்.
இவா் மருதடி முருகன் கோயிலுக்கு முன்பாக நின்று கொண்டிருந்த இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான கென்டா் வாகனத்துடன் பருத்தித்துறை நகரிலிருந்து தனது வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றுகொன்டிருந்த வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து கென்டா் வாகனத்துடன் மேதியதினால் இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.
இறந்தவாின் சடலம் உடல் பாிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இவ் சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரனையை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.