விபச்சார குற்றம் என்று கூறப்பட்டு பெண் ஒருவருக்கு 100 தென்னமட்டை அடி ( ஹத் அடித்தல்) அடித்த புத்தளம் நல்லன்தலுவ பிரதேச ஜும்மா பள்ளி பரிபாலன சபையின் நான்கு முக்கியஸ்தர்களை திகதி குறிப்பிடாத விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணவர்த்தனகே தீர்ப்பு வழங்கி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் வைத்து, ஆண் ஒருவர் தன்னை தகாத உறவில் பலாத்காரமாக ஈடுபடுத்தியதாக குறிப்பிட்ட பெண் புத்தளம் போலீசில் முறைப்பாடு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட பெண்ணை விபச்சார குற்றம் என்று கூறி, புத்தளம் நல்லன்தலுவ பிரதேச ஜும்மா பள்ளி நிர்வாகத்தினர் 100 தென்னமட்டை அடி கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பெண் தனது சட்டத்தரணியுடன் சென்று தனக்கு பள்ளிவாயல் நிர்வாகத்தால் அநீதி இழைக்கப்பட்டதாக புத்தளம் போலீசில் மீண்டும் முறைப்பாடு செய்ததை அடுத்து ஜும்மா பள்ளி பரிபாலன சபையின் நான்கு முக்கியஸ்தர்கள் விளக்கமறியலில் அடைக்கப்ட்டுள்ளனர்.