சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடு தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலியில் ஊடகவிலாயர்களிடம் கருத்து வெளியிடும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியின் சிலர் நேற்றைய தினம் வற் சட்டமூலத்திற்கான வாக்களிப்பினை புறக்கணித்துள்ளனர்.
அவ்வாறு புறக்கணித்ததன் ஊடாக அவர்களுக்கு வற் சட்டமூலத்தின் மீது உள்ள எதிர்ப்பினை காண முடிந்துள்ளது.
அத்துடன் இந்த அரசாங்கத்திற்கு எவ்விதமான மனிதாபிமானமும் இல்லை. மக்களின் கஷ்டங்களை நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என மஹிந்த மேலும் தெரிவித்தார்.