பலபிட்டிய – கல்தொட பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்துள்ள நாகப்பாம்பு குட்டியொன்று பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாம்பு வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்பட்டுள்ளதுடன், 2 அடி நீளமானது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பின்னர் குறித்த பாம்பு குட்டி மீண்டும் காட்டு பகுதியிலே விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது