இந்தோனேஷியாவில் ஒரு பாலின உறவுகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆண்கள் இருவருக்கு பொதுவெளியில் வைத்து 77 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது,
இந்தோனேசியாவில் அகே மாகாணம் மட்டுமே ஷரியா சட்டத்தை இன்னும் கடைப்பிடித்து வருகிறது. 2015ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இஸ்லாமிய சட்டங்களின்படி, தன்பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி தன்பாலின உறவுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு பிரம்படி தண்டனை வழங்கப்படுகிறது.
இப்போது கைது செய்யப்பட்ட ஆண்கள் இருவரும் 27, 29 வயதான இளைஞர்களாவர்.
ஆச்சே பிராந்திய பில் ஷரீஆ பொலிஸ் தலைவர் ஹேரு திரிவிஜனார்கோ இது தொடர்பாக கூறுகையில்,
கடந்த நவம்பர் மாதம் இவர்கள் வாடகைக்குப் பெற்ற வீடொன்றில் வைத்து இவர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அயலவர்களுக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவ்வீட்டுக்குள் அயலவர்கள் பலவந்தமாக புகுந்தபோது, மேற்படி இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை பொதுவெளியில் பகிரங்கமாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர்களுக்கு தலா 80 பிரம்படிகளை வழங்குமாறு ஷரீஆ நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
எனினும் இவர்கள் சிறையில் கழித்த காலத்தைக் கருத்திற்கொண்டு, அத்தண்டனை 77 பிரம்படியாக குறைக்கப்பட்டது.
இந்தோனேஷியாவில் அச்சே பிராந்தியத்தில் மாத்திரம் 2015 ஆம் ஆண்டு முதல் ஷரீஆ சட்டம் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதெவேளை திருமணத்துக்குப் புறம்பான உறவுகளை வைத்திருந்த நால்வருக்கு தலா 17 பிரம்படிகளும் மதுபானம் அருந்தியமைக்hக 40 பிரம்படிகளும் வழங்கப்பட்டன. வழங்கப்பட்டன.