வடக்கின் மாபெரும் சமரில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது.
‘வடக்கின் மாபெரும் சமர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று காலை கோலாகலமாக ஆரம்பமானது.
இரண்டு கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் ஆரம்பமான இந்தப் போட்டியில் வீரர்கள் அறிமுகத்தையடுத்து நாணயச்சுழற்சி இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையுமிழந்தது. இதனையடுத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பிக்க உள்ளது.
இலங்கையின் பழமை வாய்ந்த கல்லூரிகளான மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான இந்த வடக்கின் பெரும் சமர் போட்டியானது 1904ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை இடம்பெற்றுள்ள 112 சமர்களில் 36 போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரியும், 28 போட்டிகளில் மத்திய கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளன. 40 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
ஒரு போட்டி(1967) கைவிடப்பட்ட அதேவேளை, 7 போட்டிகளின் (1905, 1911-1914, 1925, 1927) முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.