ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் பிரேத பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய்.
சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார்.
இதுதொடர்பாக ராஜேஷ் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் அவரிடம் குன்வார்பாய் உடலை திகாம்கரில் உள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரும்படி கூறினார்கள்.
ஆனால், உடலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல பொலிஸார் வாகன வசதி செய்து தர மறுத்து விட்டனர். ராஜேசிடம் வாகன வசதி செய்வதற்கு போதிய பணமும் இல்லை.
#WATCH Tikamgarh: Man brought dead body of mother on a motorcycle for post mortem after being allegedly denied hearse van by district hospital in Mohangarh. Upper Collector has ordered an inquiry. (7.7.18) #MadhyaPradesh pic.twitter.com/zyrjasFTVe
— ANI (@ANI) 11 juillet 2018
இதனால் வேறு வழியில்லாமல் தனது தாயின் உடலை தனது மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் கட்டி வைத்து திகாம்கர் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்.
அவரது ஊரில் இருந்து திகாம்கர் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. அவ்வளவு தூரத்துக்கு பிணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தனர்.
சிலர் இந்த காட்சிகளை கைத்தொலைபேசியில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி அபிஜித் அகர்வால் கூறும்போது, 108 என்ற அம்புலன்ஸ் எண்ணுக்கு அழைத்து அவர் தகவல் கொடுத்திருந்தால் அம்புலன்ஸ் அனுப்பி வைத்து இருப்போம்.
அது போன்ற எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனாலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை அம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் பணம் கொடுத்து வாகன வசதி செய்ய வழி இல்லாததால் தொழிலாளி ஒருவர் இறந்த தனது மனைவியின் உடலை பல கி.மீட்டர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் நடந்தது.
இதேபோல் வாகன வசதி கிடைக்காமல் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் பிணத்தை ஏற்றி செல்லும் அவலநிலை பல மாநிலங்களிலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.