ஜப்பானிய நிறுவனம் ஒன்று துர்நாற்றத்தைக் கண்டுபிடிக்கும் ரோபோ நாயை உருவாக்கி இருக்கிறது.
ஜப்பானியர்களுக்கு ஷூக்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.
இந்த துர்நாற்றத்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே ரோபோ நாய் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் ரோபோ நாய் அருகில் வரும். துர்நாற்றம் வரவில்லை என்றால் மகிழ்ச்சியாக வாலை ஆட்டிக்கொண்டு சென்றுவிடும்.
துர்நாற்றம் வந்தால் கோபமாகக் குரைக்க ஆரம்பித்துவிடும். காலணிகள் மட்டுமின்றி வீட்டிலிருந்து வரும் எத்தகைய துர்நாற்றத்தையும் கண்டுபிடித்துவிடும் அளவுக்கு உயர் தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது.
15 செ.மீ. நீளம் இருக்கும் இந்த ரோபோ நாய், சில நொடிகளில் நுகர்ந்து பார்த்துவிட்டுச் சொல்லி விடுகிறது.
3 விதங்களில் தன்னுடைய கருத்தை இது வெளிப்படுத்துகிறது. நறுமணம் என்றால் வால் ஆட்டும், துர்நாற்றம் என்றால் குரைக்கும், தாங்க முடியாத துர்நாற்றம் என்றால் கீழே வீழ்ந்துவிடும்.