ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், 30 மனிதர்களைக் கொன்று அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
திமித்ரி பக் ஷீவ், அவரின் மனைவி நட்டாலியா பக் ஷீவ் ஆகியோரே இத்தம்பதியினர் ஆவர்.
ரஷ்யாவின் தென்பிராந்தியத்திலுள்ள இத்தம்பதியின் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித உடற்பாகங்கள் பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
35 வயதான திமித்ரி பக் ஷீவும் அவரின் மனைவி நட்டாலியும் (42) ரஷ்யாவின் கிரஸ்னோடர் இராணுவ பயிற்சியகமொன்றில் பணியாற்றியவர்கள்.
அங்கு பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதையடுத்து, மேற்படி தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, மேற்படி இளம் பெண்ணை தான் கொலை செய்ததை திமித்ரி பக் ஷீவ் ஒப்புக்கொண்டார்.
Dimitri-Buck-Shev-Natalia-Buck-Shev
சடலங்கள் பலவற்றுக்கு அருகிலிருந்து நபர் ஒருவர் பிடித்துக்கொண்ட செல்பி படங்கள் அடங்கிய தொலைபேசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதையடுத்து, தான் பல மனிதர்களை கொன்றதாக திமித்ரி ஒப்புக்கொண்டார். தன்னால் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை வெட்டி, தான் உட்கொண்டதாகவும் அவர் தெரிவித்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
1999 ஆம் ஆண்டிலிருந்து தான் இப்பயங்கர நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாக விசாரணையின்போது அவர் தெரிவித்துள்ளார். இக்கொலைகளுக்குத் தானும் உடந்தையாக இருந்ததாக 42 வயதான நட்டாலியா ஒப்புக்கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, உறைந்த நிலையில் மனித உடற்பாகங்கள் வைக்கப்பட்டிருந்த ஜாடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். திமித்ரி பக் ஷீவும், நட்டாலியாவும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.