நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் இன்று முதல் எதிர்வரும் 04 நாட்களுக்கு நாளாந்தம் ஒரு மணித்தியாலத்திற்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
முழுநாடும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, வலைய ரீதியாக, மாலை 6-7 மணி, இரவு 7-8 மணி, இரவு 8-9 மணி மற்றும் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.