ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். ஜப்பானின் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது பாரியாரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி விக்ரமசிங்க ராஜபக்ஸவும் வரவேற்றதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானின் நிதி உதவியுடன் பயணிகளுக்காக இரண்டு மாடி கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்ற வேலை தளத்தையும் ஜனாதிபதி மற்றும் ஜப்பான் பிரதமர் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.