திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம். இங்கு 49 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் நாகேந்திரன். 16 வயது நிரம்பியுள்ள இவருடை மகள் திவ்யாவை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க இருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் உண்மையை கண்டறிந்து குழந்தைத் திருமணம் செய்வதை தடுத்து நிறுத்தினார்கள். நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.