தேசிய அடையாளங்களில் முக்கியமானதாக தேசிய கொடி காணப்படுகின்றது. மேலும் நாட்டில் முக்கிய பிரமுகளின் வாகனங்களில் தேசியக்கொடி இணைக்கப்பட்டிருப்பது வழக்கமான ஒரு விடயமாகவும் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் முல்லைத்தீவு A34 வீதியால் பயணித்த முக்கிய பிரமுகர் ஒருவரின் வாகனத்தில் இணைக்கப்பட்டிருந்த தேசியக்கொடி அலட்சியப் போக்கில் இருந்துள்ளதை அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யுத்த பாதிப்புகளை பார்வையிட வந்திருந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் வானத்திலேயே இவ்வாறு தேசியக்கொடி அலட்சியப் போக்கில் இருந்துள்ளது.
குறித்த வாகனம் இன்று புதுமத்தளன் பகுதி பொது நோக்கு மண்டபத்தை வந்தடைந்திருந்த நிலையில், குறித்த விடயத்தினை அவதானித்த பொது மக்கள் விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.