மகளின் காதலனின் அழகில் மயங்கிய தாய், மகளுக்கு திருமணம் முடித்து கொடுத்து விட்டு மருமகனோடு தொடர்ந்து உல்லாசமாக இருந்த சம்பவமொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர் சந்திரா. இவருக்கு கணவன் இல்லை.
மகள் புவனாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகள் ஒரு இளைஞனை காதலித்துள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். தாயும் அதற்கு நீ காதலிக்கும் இளைஞனை பார்க்க வேண்டும். வீட்டுக்கு அழைத்து வா பேசுவோம் என கூறியுள்ளார்.
தாய் சம்மதம் தெரிவித்த மகிழ்ச்சியில், புவனா தன் காதலனுக்கு கூறி வீட்டுக்கும் அழைத்து சென்றுள்ளார். மகளின் காதலன் அழகாக இருந்ததால் தாய்க்கும் பார்த்த மாத்திரத்தில் பிடித்து விட்டது.
உடனே அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞனிடம் அவரது செல்போன் இலக்கத்தையும் பெற்றுள்ளார். பின்னர் அடிக்கடி தனது காரியாலயத்தில் வைத்து அந்த இளைஞனுடன் பேசியுள்ளார்.
ஒரு நாள் காரியாலயத்துக்கும் வரச்சொல்லி பேசியுள்ளார்.
அந்த இளைஞனும் மாமியாரின் சொல்லை தட்டாமல் தங்களது திருமண பேச்சு குறித்துதான் பேசுவார் என மாமியார் வேலைபார்க்கும் காரியாலயத்துக்குச் சென்றுள்ளான். அப்போது தேநீர் குடிக்கலாமெனக்கூறி அவரது காரில் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
ஹோட்டலில் நீண்ட நேரம் இளைஞனோடு பேசியுள்ளார். அப்போது தனது மகள் திருமணம் செய்யப்போகும் இளைஞன் என்றும் பார்க்காமல் அந்த இளைஞனின் அழகைப் புகழ்ந்துள்ளார்.
“இருபது வருடங்களுக்கு முன் உன்னைப் சந்தித்திருந்தால் நானே உன்னை லவ் பண்ணியிருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார். வரும்கால மாமியாரின் இந்த வார்த்தையை கேட்டு மருமகன் வெட்கப்பட்டுள்ளான்.
இவ்வாறு மகளின் காதலனை அடிக்கடி வரச்சொல்லி உணவருந்தவும், தேநீர் அருந்தவும் அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது இளைஞனை தொட்டும் பேசியுள்ளார்.
அதன் பின்னர் தீவிரமாக மகளின் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். திருமணத்தன்று இளைஞனின் காதில் “அப்படியே எனக்கும் ஒரு தாலியை கட்டிடுங்க மாப்பிளை” என்று கூற இளைஞனுக்கும் வெட்கம் வந்து விட்டது. திருமணம் முடித்து ஒருவாரம் போனது..!
மருமகனிடம் ரொம்பவே நெருங்கி விட்டார் மாமியார். தொட்டுப் பேசுவது, பக்கத்தில் உட்கார்ந்து ஒட்டி உரசுவது என்று..!
இந்நிலையில் ஒரு நாள் மருமகனிடம் உன்னுடன் நான் உல்லாசமாக இருக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
இதற்கு மருமகனும் சம்மதிக்க, அதன் பின் மகளுக்கு தூக்க மாத்திரை கலந்த பாலைக் கொடுத்த தாய், இரவு மருமகனோடு உல்லாசமாக இருந்துள்ளார்.
வழமையாக தாயும் கணவனும் இவ்வாறு செய்துள்ளனர்.
மகளுக்கு சந்தேகம் வந்து விட்டது. என்ன நடக்கிறது..? ஏன் இப்படி உறங்குகிறோம்..? ஒரு நாள் இரவு பால் குடித்து விட்டு உறங்குவது போல நடித்து காத்திருந்துள்ளார்.
அன்று இரவு தனது காதல் கணவனும் தாயும் ஒன்றாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர்கள் கையும் களவுமாக பிடிபட மகள் அழுது கதறியுள்ளார். அடுத்த நாள் தாய், கணவன் இருவரையும் விட்டு அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார்.