அனிதா தற்கொலை விவகாரம் ஒரு புறம் எரிந்து கொண்டிருக்க…
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நெரிப்பரிச்சல் மெயின் ரோட்டில் இருந்து, சில அடிகள் தூரத்தில் ஒரு இளம் பெண் மரத்தில் தூக்கில் தொங்குகிறார் என்று தகவல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.
காவல் துறை உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வரையில் இளம் பெண்ணின் உறவினர்கள் யாரும் வரவில்லை.
அந்த பெண் வேறு மாநிலத்தின் பெண் போன்று இருந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பெண்ணை விட பல மடங்கு உயரமான மரம். கயிறு கட்ட கூட மேலே ஏறுவது கடினம். இருந்த போதிலும் மரத்தை விட்டு தள்ளியவாறு உடல் தூக்கில் தொங்குகிறது.
அந்த மரத்தில் கயிறை கட்டவே இரண்டு பேரின் உதவி வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தை தற்கொலை என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை செய்துவருகிறார்கள்.
இந்த மரணத்தின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும், திருப்பூர் மாநகர காவல்துறைக்கும் பல கோரிக்கைகள் வந்துள்ளது.
திருப்பூர் மாநகரில் வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் லட்சகணக்காண தொழிலாளர்கள் பிழைப்புக்காக வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
திருப்பூரில் யாருக்கு வேண்டுமானாலும் வேலை கிடைப்பதால் அவர்கள் குடும்பத்துடனும் குடியேறியும் வருகிறார்கள்.
இதில் பிரச்சனை என்னவென்றால்..?
எல்லா ஊர்களிலும் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வந்தால் காலை எட்டு மணிக்கு கம்பெனிக்குள் சென்றால் இரவு 12 மணி வரை கூட வேலை இருக்கும்.
மாதகணக்கில் பனியன் கம்பெனிக்குள் இருப்பதால் வெளியுலகத்திற்கு அவர்கள் வந்ததே தெரியாமல் போகிறது.
அங்கேரிபாளையம் பகுதியிலே குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் வெளி மாநிலத்தவர்களாவது குடியிருப்பார்கள்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு சர்வதேச திவிரவாதிகள் முதல் பல சமூகவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் வரை திருப்பூரில் பதுங்கி கொள்ள வசதியாக இருக்கிறது.
இதை தடுப்பதற்கு காவல் துறை தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
வாடகை வீட்டில் வசிக்கும் யாராக இருந்தாலும் அருகே உள்ள காவல் நிலையத்தில் முழு விபரம் பெறபடவேண்டும்.
வாடகை வீடு கொடுப்பவர்களை முறையான ஆவணம் இல்லாமல் குடி அமர்த்தகூடாது. இது போன்ற பல கோரிக்கைகளை காவல்துறையிடம் முன்வைத்துள்ளனர்.