ஆண்கள் கற்பழிப்பு :
ஜிம்பாபேவில் இருக்கும் விசித்திரமான நடைமுறை இது. ஜூஜூ என்று அழைக்கப்படும் இந்த நடைமுறையின் படி பெண்கள் ஆண்களை கற்பழிக்க வேண்டும்.
அதோடு அவர்களை விந்தணுக்களை திருடிக்கொண்ட தப்பித்திட வேண்டும். இப்படிச் செய்வதால் பெண்களின் ஆயுள் கூடுமாம். சமீபத்தில் பல ஆண்கள் இதற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள்.
ராம்னி என்ற ஜிப்சிகளின் கலாச்சாரத்தின் படி ஒரு பெண்ணைக் கடத்தி மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்திருந்தால் சட்டப்படி அவர்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முழு உரிமையும் வந்துவிடுகிறதாம்.
பின்னர் எரிந்த சாம்பலையும் எலும்புத்துண்டுகளையும் அவர்கள் குடிக்கும் சூப்பில் கலந்து குடித்துவிடுகிறார்கள். இதனால் இறந்து போன உறவு தம்மோடு எப்போதும் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சண்டீஸ்வரர் கோவில் ஐம்பதடி உயரத்தில் இருந்து கைக்குழந்தைகளை கீழே வீசுகிறார்கள். கீழே இருப்பவர்கள் துணியைக் கொண்டு குழந்தையை பிடித்து காப்பாற்றுகிறார்கள். இப்படி செய்வதால் அதிர்ஷ்டம் வரும் நம்புகிறார்கள் வருடந்தோறும் 200 குழந்தைகள் வரை இப்படி உயிரை பணையம் வைக்கிறது.
ஒரு வித கட்டெறும்புகள் நிறைந்த உள்ளாடையை ஆண்கள் அணிய வேண்டும். சதையை ஒரு தோட்டா துளைத்தால் எப்படி வலிக்குமோ அப்படியான வலி உண்டாகும்.
ஒரு ஆண் , இந்த நடைமுறையை செய்யவில்லையெனில் அவன் ஆண் என்றே கருதப்பட்ட மாட்டானாம். அவர்கள் இனத்தில் ஆண்கள் கண்டிப்பாக இந்த நடைமுறையை பின்பற்றியாக வேண்டும்.
விரலை வெட்டுதல் :
உலகிலேயே மிகவும் கொடூரமான நடைமுறையாக இது பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் வசிக்கும் டேனி பழங்குடியின மக்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் இறந்துவிட்டால் உயிரோடு இருக்கும் பெரியவர் தன் விரலை வெட்டிக் கொள்ள வேண்டும்.
சீனக் கால்கள் : சீனாவில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறை இது. இளம்பெண்களின் கால்களை 4 அல்லது ஐந்து வருடங்கள் கட்டி வைப்பாரக்ள். அவர்கள் பாதம் வளரக்கூடாது என்பதற்காக. இப்படிச் செய்வதால் கெட்ட சக்திகள் அண்டாது, மத நம்பிக்கை, போன்றவை எல்லாம் அல்ல, அழகுக்காக இப்படிச் செய்கிறாரக்ள்.
கழிவறைக்குச் செல்லத்தடை :
கேட்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறதல்லவா? இந்தோனேஷியாவில் வசிக்கும் டிடோங் என்ற இனமக்கள் இதனை கடைபிடிக்கிறார்கள்.
அவர்களின் திருமண சடங்குகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. திருமணம் முடித்து மூன்று நாட்கள் அந்த ஆணும் பெண்ணும் கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
இப்படிச் செய்வதால் தம்பதிகள் நீண்ட ஆயுளுடனும் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வார்கள் என்று நம்புகிறார்கள். மூன்று நாட்களுக்குப்பிறகு கழிவறையை பயன்படுத்தலாம்.