யாழ்ப்பாணத்தில் எந்தப் புற்றினுள் என்ன பாம்பு இருக்கன்றது எனத் தெரியாமல் எத்தனையோ இடங்களில் நச்சுப் பாம்புகள் போல் உள்ளவர்களால் கடி வாங்கித் திரிபவர்களுக்கு மத்தியில்
புற்றுக்குள் இருக்கும் பாம்பை வைத்து யாழ்ப்பாணத்தில் பல ஆயிரங்களை நாள் ஒன்றுக்கு சம்பாதித்து வருகின்றார்கள் பாம்பாட்டிகள்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ் கொக்குவில், சுன்னாகம், உடுவில் போன்ற பகுதிகளில் ஒரு நாளில் பாம்புகள் குரங்குகளை வைத்து ஆட்டம் காட்டி சம்பாதித்த பணத்தை உடுவில் பகுதியில் உள்ள முடிய கடை ஒன்றின் முன்னால் வைத்து பங்கு போட்டார்கள் குறித்த பாம்பாட்டிகள்.
அன்று மட்டும் அவர்களுக்கு சேர்ந்த பணம் 20 ஆயிரம் ரூபாவுக்கு மேல். அந்தப் பணத்தை பாம்பாட்டியும் அந்த பாம்பாட்டியின் உதவியாளர்களான 4 பேரும் பகிர்ந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இதுவாகும்.
குறித்த புகைப்படங்களை எமது இணையத்தளத்துக்கு அனுப்பிய அந்த ஊடகவியலாளர் ”அவங்களிலும் பார்க்க நாங்கள் பயங்கர வேலை செய்யிறம்… ஒருத்தனும் எங்களை கவனிப்பாரில்லை…. நானும் பேசாமல் பாம்பாட்டியாக மாறலாம் என நினைக்கிறேன்” என்ற பதிவுடன் அனுப்பியிருந்தார்.
உண்மையில் நாகபாம்பு, புடையன்பாம்பு, கொடுக்கன், புலிநகச்சிலந்தி, ம்ட்டைத்தேள், பிள்ளைப் புச்சி என பல ரூபங்களில் உள்ள யாழ்ப்பாண அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் ஊடகத்தொழிலை செய்து பழக்கப்பட்ட யாழ்ப்பாண ஊடகவியளார்களுக்கு பாம்பாட்டும் தொழில் என்பது மிகவும் கைதேர்ந்த ஒன்றாக இருக்கும் என எண்ணலாம்.